sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நில மோசடி வழக்கில் தொழிலதிபருக்கு சிறை

/

நில மோசடி வழக்கில் தொழிலதிபருக்கு சிறை

நில மோசடி வழக்கில் தொழிலதிபருக்கு சிறை

நில மோசடி வழக்கில் தொழிலதிபருக்கு சிறை


ADDED : ஜூன் 27, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அஸ்வந் கண்ணா 38. தனியார் கப்பல் நிறுவனத்தில் மெரைன் இன்ஜினியராக உள்ளார். இவருக்கு சொந்தமான ஒரு லட்சத்து 24 ஆயிரம் சதுரஅடி இடம் திண்டுக்கல் பி.வி.தாஸ் காலனியில் உள்ளது. இந்த இடத்தை விற்பனை செய்து தருவதாக பாண்டியன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜேந்திரன் 70 ,கூறி உள்ளார். இதனால் அவரது பெயருக்கு நிலத்தை அஸ்வத் கண்ணா பவர்ஆப் அட்டாணியை எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி நிலத்தை விற்று பணம் தரவில்லை. கேட்டபோது ராஜேந்திரனும் அவரின் குடும்பத்தினரும் பணம் கொடுத்துவிட்டதாக கூறி உள்ளனர். போலி செட்டில்மென்ட் பில்லையும் காட்டி உள்ளனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் 2011ல் புகார் செய்தார்.

இதன் வழக்கு திண்டுக்கல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2ல் நடந்தது. அரசுதரப்பில் வழக்கறிஞர் மதிவாணன் வாதாடினார். ராஜேந்திரனுக்கு 3 ஆண்டு சிறை , ரூ.40,000 அபராதம் விதித்து நீதிபதி தினேஷ்குமார் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us