/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இணைய வழி திறன் பயிற்சிக்கு அழைப்பு
/
இணைய வழி திறன் பயிற்சிக்கு அழைப்பு
ADDED : பிப் 05, 2026 05:43 AM
திண்டுக்கல்: தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் ராஜ்குமார் கூறியதாவது: நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுகளாக உள்ள 10 ஆயிரம் மாணவர்களுக்கு 40 பயிற்சி பிரிவுகளில் இணைய வழி திறன் மேம்பாட்டுப்பயிற்சி வழங்க உள்ளோம்.
நடப்பு கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக்,டிப்ளமோ, ஐ.டி.ஐ., பயில்வோர் விண்ணப்பிக்கலாம். உயர்கல்வித் உதவித் தொகை பெற்றவர்கள், இதை பெறவிண்ணப்பித்திருப்பவர்கள் தகுதியானவர்கள் . பயிற்சி பெறவிரும்புவோர் தாய் தந்தையின் ஆதார் இதர ஆவணங்களின் நகல் களை நேரடியாக திண்டுக்கல்கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் பூர்த்தி செய்து வழங்கி சேரலாம். கூடுதல் விபரங்களுக்கு 0451 2460 330, https://application.tnbocw.com/ விண்ணப்பிக்கலாம் என்றார்.

