/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேடசந்துாரில் டூவீலர், வேன் மீது கார் மோதி விபத்து; 4பேர் காயம்
/
வேடசந்துாரில் டூவீலர், வேன் மீது கார் மோதி விபத்து; 4பேர் காயம்
வேடசந்துாரில் டூவீலர், வேன் மீது கார் மோதி விபத்து; 4பேர் காயம்
வேடசந்துாரில் டூவீலர், வேன் மீது கார் மோதி விபத்து; 4பேர் காயம்
ADDED : ஆக 03, 2025 04:05 AM

வேடசந்துார் : வேடசந்துாரில் டூவீலர் , வேனில் கார் மோதியதில் ரோட்டோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.இதில் 4 பேர் காயமடைந்தனர்.
வேடசந்துார் நாகம்பட்டியை சேர்ந்தவர் பசி இல்லா வேடசந்துார் நிர்வாகி நாச்சிமுத்து 40, இதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் 60, முரளி 40, திருப்பதி 40, ஆகியோர் ராமேஸ்வரம் செல்வதற்காக வேடசந்துார் நோக்கி வேனில் வந்தனர். அரசு டெப்போ சிற்றோடை பாலம் அருகே வந்தபோது
வேடசந்துார் நோக்கி வந்த கார் டூவீலர் ஒன்றின் மீது மோதியது.
இதில் நிற்காமல் சென்ற கார் முன்னே சென்ற நாச்சிமுத்து ஓட்டி சென்ற வேன் மீது மோதியதில் இதில் ரோட்டோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
டூ வீலரில் வந்த தோப்புப்பட்டி விக்னேஸ்வரன் 31, வேனில் வந்த கோவிந்தராஜ், முரளி, திருப்பதி காயமடைந்தனர்.
இவர்கள் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.