ADDED : ஆக 03, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கேரம் போட்டிகள் திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், மதர் தெரசா லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டியில், 12, 14, 18 வயது உட்பட்டவர்கள் பள்ளி சீருடை அணிந்து கலந்துகொண்டனர்.
போட்டியானது ஒற்றையர், இரட்டையர் பிரிவு என குழு வாரியாக நடந்தது. இன்று மாணவிகளுக்கான போட்டி , இறுதிப்போட்டியும் நடக்கிறது. மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது.

