ADDED : ஜன 10, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமலை : மதுரை மணிபாரதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:சிறுமலையில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக பல்லுயிர் பூங்காவை தமிழக அரசு ரூ.5 கோடி செலவில் அமைத்தது.
பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அறிவிப்பு பலகை, பாதுகாப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு வனத்துறை முதன்மைச் செயலர், வன அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு பிப்.19 க்கு ஒத்திவைத்தது.