/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விநாயகர் கோயில்களில் சதுர்த்தி -வழிபாடு
/
விநாயகர் கோயில்களில் சதுர்த்தி -வழிபாடு
ADDED : அக் 07, 2024 05:42 AM
திண்டுக்கல்: வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோயில்களில் நேற்று வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோயிலில் காலை 7:00 மணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் நடந்தது. பலர் சதுர்த்தி விரதம் மேற்கொண்டு விநாயகரை தரிசித்தனர். திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர், சவுராஷ்டிராபுரம் விநாயகர், வாணிவிலாஸ் மேடு கலைக்கோட்டு விநாயகர், ரவுண்ட்ரோடு கற்பக விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.