/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேகமூட்டம்; விவசாயிகள் ஏமாற்றம்
/
மேகமூட்டம்; விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : மே 28, 2025 12:28 AM
ஆத்துார் : ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்றி தொடரும் மேகமூட்டத்தால் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் இதன் அருகில் கூடுதல் தண்ணீர் தேக்கும் வகையில்மற்றொரு சிறு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மட்டுமின்றி வழித்தடத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கும் தண்ணீர் ஆதாரமாக அமைந்துள்ளது.சில வாரங்களாக நிலவும் அதிக வெப்பத்தால்நீராதாரங்களில் நீர் மட்டம் வெகுவாக குறையதொடங்கியது. சுற்றுப்பகுதியில் உள்ள பாசன கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
சமீப நாட்களாக அக்னி கடந்தும் பகலில் அதிக வெப்பம், மாலையில் மேக மூட்டமும் நீடிக்கிறது.
செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி பகுதிகளில் பகலில் அனல் காற்று வீசுகிறது. காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு மழை கிராமங்களான ஆடலுார், பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை இல்லை. வெறுமனே மேகமூட்டம் மட்டும் நீடிக்கும் நிலையில்இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றத்தில்உள்ளனர்.