sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையில் கிடந்த மனுக்கள் எரித்த கலெக்டர் அலுவலர்கள்

/

குப்பையில் கிடந்த மனுக்கள் எரித்த கலெக்டர் அலுவலர்கள்

குப்பையில் கிடந்த மனுக்கள் எரித்த கலெக்டர் அலுவலர்கள்

குப்பையில் கிடந்த மனுக்கள் எரித்த கலெக்டர் அலுவலர்கள்


ADDED : பிப் 07, 2025 01:37 AM

Google News

ADDED : பிப் 07, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமைகளில் ஏராளமானோர் மனு அளித்துச் செல்கின்றனர். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆனால், குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் குப்பை போல குவித்து வைக்கப்பட்டிருந்தன. பத்திர நகல்கள், முக்கிய ஆவணங்களின் நகல்கள், மனுவில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சான்றுகள் என அனைத்தும், கலெக்டர் அலுவலக ஒப்புகை சீட்டுடன் குப்பையில் கிடந்தன. இதைப் பார்த்து பொதுமக்கள் அங்கு கூட துவங்கினர். தகவலறிந்த அலுவலர்கள் மனுக்களை தீயிட்டு எரித்தனர்.

இந்த மனுக்கள் தீர்வு காணப்பட்ட மனுக்களா, தீர்வு காணப்படாத மனுக்களா என்பது குறித்த தகவல் கூற அதிகாரிகள் மறுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில், ஏற்கெனவே அளிக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதில்லை என, வாரந்தோறும் பலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சிக்கும் நிலையில், மனுக்கள் குப்பையில் கிடந்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us