ADDED : பிப் 16, 2026 05:41 AM

வேடசந்துார்: ஸ்ரீ ராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்து பேசியதாவது; வேடசந்துார் தொகுதியில் இதே போன்று 15 கிராமங்களில், சமுதாயக் கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சுவர்களில் எழுதுவது, படங்கள் வரைவது, பிளக்ஸ் ஒட்டுவது போன்ற வேலைகளை செய்யக்கூடாது. இது உங்களுக்கான மண்டபம். நல்ல முறையில் அனைத்து விசேஷங் களையும் நடத்துங்கள். மிகக் குறைந்த கட்டணமாக ரூ.1000 என, நிர்ணயித்து, பராமரிப்பு செலவுகளை செய்து கொள்ளுங்கள் என்றார். விழாவில் தி.மு.க., நிர்வாகிகள் ஜெசி லுார்து மேரி, ரவிசங்கர், முருகவேல், ராஜமோகன், பூவரசன், சிவசாமி, ஒப்பந்ததாரர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

