sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளி, கல்லுாரி மாணவர்களின் ஆபத்து பயணம்  தொடர்கிறது; பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வதால்

/

பள்ளி, கல்லுாரி மாணவர்களின் ஆபத்து பயணம்  தொடர்கிறது; பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வதால்

பள்ளி, கல்லுாரி மாணவர்களின் ஆபத்து பயணம்  தொடர்கிறது; பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வதால்

பள்ளி, கல்லுாரி மாணவர்களின் ஆபத்து பயணம்  தொடர்கிறது; பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வதால்


ADDED : நவ 15, 2025 04:53 AM

Google News

ADDED : நவ 15, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என 1440 உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் மட்டும் மொத்தம் 3லட்சத்து 12 ஆயிரத்து 881 மாணவர்கள் படிக்கின்றனர். 9 அரசு மற்றும் பல தனியார் கல்லுாரிகளும் இயங்குகின்றன. இதில் 12ம் வகுப்பு முடித்து கடந்த ஆண்டு 20,802 மாணவர்கள் மேற்கல்வி படிக்கின்றனர். ஏராளமான மாணவர்கள் கிராமங்களில் இருந்து நகர்களுக்கு சென்று பயின்று வருகின்றனர். ஒரு சில தனியார் பள்ளி, கல்லுரிகள் மட்டும் தங்களது சொந்த வாகனங்களில் மாணவர்களை ஏற்றி வருகின்றன. மற்றபடி பெரும்பாலான மாணவர்கள் அரசு, தனியார் பஸ்களையே நம்பி உள்ளனர். கூடுதல் பஸ்களை இயக்காதது, பல கிராமங்களில் அரசு பஸ் வசதி இல்லாதது, திடீரென பஸ்கள் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிகொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

காலை, மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர் என கூடுதலானோர் பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால் தினமும் அடித்துப் பிடித்து பஸ்சில் இடம் பிடித்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us