/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் தொடர்மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
கொடைக்கானலில் தொடர்மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 05, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை கொடைக்கானலை பனிமூட்டம் சூழ விட்டு சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பின் மிதமான மழை பெய்தது.
இங்குள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் வரத்து குறைவாக இருந்தது. பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மழையால் பயணிகள் விடுதிகளில் முடங்கினர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது.