sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் கட்டுப்பாட்டு மையம்

/

'கொடை'யில் கட்டுப்பாட்டு மையம்

'கொடை'யில் கட்டுப்பாட்டு மையம்

'கொடை'யில் கட்டுப்பாட்டு மையம்


ADDED : மார் 31, 2025 05:53 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானலில் சீசனுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் சரவணன் கூறியதாவது: கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் வசதி இல்லாத நிலை, அடிப்படை வசதிகள் நிறைவேற்றுதல் உள்ளிட்ட நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சில வாரங்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தற்போதைய பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட், ரோஜா பூங்கா பகுதியில் தற்காலிக பார்க்கிங் வசதி ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. கோக்கர்ஸ்வாக் ,பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோர பள்ளங்கள் சீர் செய்யப்பட்டு பார்க்கிங் வசதி செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் குறைகள் களையப்பட உள்ளது. நகராட்சியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டிற்கு வருகிறது. போலீசார் அறிவுறுத்தும் பகுதியில் மட்டுமே பார்க்கிங் செய்ய வேண்டும். மீறுவோர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வாட்டர் ஏ.டி.எம். 25 இடங்களில் அமைக்கப்பட உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us