sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்

/

தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்

தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்

தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்


ADDED : ஜன 13, 2024 04:02 AM

Google News

ADDED : ஜன 13, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டம் தலைவர் திருமலைசாமி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது துணைத்தலைவர் வெள்ளைச்சாமி (தி.மு.க.,) கமிஷனர் கணேஷ் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்:

பழனிச்சாமி (தி.மு.க.,), ஜெயமணி (தி.மு.க.), அழகேஸ்வரி (தி.மு.க.,): நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ராஜமோகன் (துப்புரவு ஆய்வாளர்) : விலங்குகள் நல வாரியத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்

ஜெயமணி(தி.மு.க.): தெருக்களின் சந்திப்புக்களில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை

முகமது மீரான் (காங்.,): தெரு விளக்குகளின் வெளிச்சம் குறைவாக உள்ளது. அதிக ஒளி தரும் விளக்குகளை பொருத்த வேண்டும்

கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயமணி (தி.மு.க.), : வார்டு அடிப்படைப் பிரச்னைகள் குறித்து தெரிவித்த பின்பும் நிறைவேற்ற தாமதம் ஆகிறது.

தலைவர்: வார்டு பிரச்னைகளை நிவர்த்தி செய்ய செல்லும்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

முகமது மீரான் (காங்.,) : திண்டுக்கல் பழநி ரோட்டில் தெற்கு பகுதியில் பேட்டரி வண்டி மூலம் குப்பை அள்ளுவதே கிடையாது.

அழகேஸ்வரி (தி.மு.க.,): வ.உ.சி.நகரில் குப்பையை அகற்ற தாமதமாவதால் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன.

ராஜமோகன் (துப்புரவு ஆய்வாளர்): துாய்மை பணியாளர்களில் ஐந்து பேர் நீண்ட விடுப்பில் உள்ளதால் தாமதமாகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படைகள் வசதிகள் செய்து தருவதற்கு ரூ.5 லட்சத்திற்கான தீர்மானம் உட்பட 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us