ADDED : அக் 05, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது. போதை ஒழிப்பு ஊர்வலத்தை சண்முகம்,தலைவர் வீரமணி தொடங்கி வைத்தனர்.
முன்னாள் மாணவர் அமைப்பின் பொறுப்பாளர்கள் மரிய லுாயிஸ்,சேகர், மைக்கேல்,தேவராஜ் , மரிய ராஜேந்தர், ஜெயசீலன் பங்கேற்றனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜேம்ஸ் வழி நடத்தினார். உதவி திட்ட அலுவலர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.