ADDED : மார் 15, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : திண்டுக்கல் என்.எஸ்., நகர் பகுதியை சேர்ந்த தியாகராஜன் 60, மனைவி கீதா 55,வுடன் திருச்சியிலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் திரும்பினர்.
நான்குவழிச்சாலையில் அய்யலுார் வடமதுரை இடையே பெருமாள்கோவில்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பாதுகாப்பு தடுப்பு துாணில் மோதி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தில் இருவரும் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

