ADDED : ஜன 29, 2026 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் இருந்து சித்தரேவு செல்லும் ரோடு பல இடங்களில் குண்டும், குழியுமாக இருந்தது.
இது சம்பந்தமாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து ஆத்துார் நெடுஞ்சாலை துறையினர் இந்த ரோட்டை புதுப்பித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 2 .57 கோடியில் அகலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. கோட்ட பொறியாளர் சாமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, உதவிப் பொறியாளர் பரத், சாலை ஆய்வாளர் அருள்சாமி பணிகளை ஆய்வு செய்தனர்.

