sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போதிய பஸ் வசதியின்றி ஆபத்து பயணம்

/

போதிய பஸ் வசதியின்றி ஆபத்து பயணம்

போதிய பஸ் வசதியின்றி ஆபத்து பயணம்

போதிய பஸ் வசதியின்றி ஆபத்து பயணம்


ADDED : ஜூலை 09, 2025 07:04 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: சின்னாளபட்டிக்கு காலை, மாலை நேரத்தில் போதிய அரசு டவுன் பஸ் வசதியின்றி வெகுநேரம் காத்திருக்கும் பயணிகள் விபத்து அபாய பயணத்தை மேற்கொள்ளும் அவல நிலை தொடர்கிறது .

ஆத்துார் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, திண்டுக்கல் கிளை 2, கிளை 3 டெப்போக்களில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விவசாய தொழிலை அடிப்படையாக கொண்ட இப்பகுதி கிராமங்களில் அரசு டவுன் பஸ் சேவையே முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. இப்பகுதி கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ் சேவையை நம்பி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வரை ரோடு, பாலங்கள் சீரமைப்பு பணிகள் பரவலாக பல இடங்களில் நடந்தது. இதையே காரணமாக கூறி அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தை அதிகாரிகள் குறைத்தனர். சில வழித்தடத்தில் அரசு பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவது தற்போது வரை தொடர்கிறது. பல கிராமங்களில் பஸ் சேவை துண்டிக்கப்படுவதும் மக்கள் அவதிக்குள்ளாவதும் வாடிக்கையாகி வருகிறது.

பல வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிக்காததால் அடிக்கடி பஸ் ஸ்டாண்ட் புறக்கணிப்பு, டிரிப்-கட் செய்யப்படும் நிலை தொடர்கிறது. வெளியூர் பயணத்திற்காக கிராம பஸ்களை மாற்றி அனுப்புகின்றனர்.அதிகாரிகள் அலட்சியம் மட்டுமின்றி ஊழியர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளால் மகளிர், கூலித்தொழிலாளர்கள், முதியோர் பாதிப்படையும் அவலமும் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தில் நிலவும் குளறுபடிகளை நீக்கி கிராமங்களுக்கான தடையற்ற சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவதிக்குள்ளாகும் பயணிகள்


சித்திரவேலு,தனியார் நிறுவன ஊழியர், சின்னாளபட்டி : கிராம அரசு டவுன் பஸ்களை டிரைவர், கண்டக்டர்கள் விருப்பத்திற்கேற்ப பாதி துாரம் வரை மட்டுமே இயக்குவது அல்லது முழுமையாக நிறுத்தி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மகளிர், கூலித் தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு சென்று திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் நீடிக்கிறது. திண்டுக்கல்,சின்னாளபட்டி, தனியார் பஸ்களுக்கு ஏதுவாக அரசு பஸ் இயக்கத்தை தடை செய்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.

அதிகாரிகள் அலட்சியம்


திருநாவுக்கரசு, நெசவுத் தொழிலாளர், சின்னாளபட்டி: தனியார் பஸ்களுக்கு ஏதுவாக பல அரசு டவுன் பஸ் டிரிப்களை காலை, மாலை நேரங்களில் நிறுத்திவிட்டனர். மாணவர்கள் விபத்து அபாய நிலையில் சரக்கு வாகனங்கள், தனியார் பஸ்களில் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர். உடல்நல குறைவு பிரச்னைகளும் ஏற்படுகிறது. பள்ளி நேர டவுன் பஸ்களை தடையின்றி இயக்க ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் கிளை 2, 3 டெப்போக்களின் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us