sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைக்கானல் ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து அபாயம்

/

கொடைக்கானல் ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து அபாயம்

கொடைக்கானல் ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து அபாயம்

கொடைக்கானல் ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து அபாயம்


ADDED : ஜூன் 17, 2025 04:56 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானலில் ரோட்டோரம் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.

சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். சுற்றுலா நகருக்கு பழநி, வத்தலக்குண்டு ரோடுகள் பிரதானமாகும்.

இவ்விரு ரோடுகளில் மலையடிவாரத்தியிருந்து கொடைக்கானல் வரை ரோட்டோரம் காய்ந்த மற்றும் உறுதியற்ற மரங்கள் ஏராளமாக உள்ளது.

இம்மரங்கள் வனம் மற்றும் பட்டா நிலங்களில் உள்ளது. 2023 ல் மூலையாறு பகுதியில் சுற்றுலா வாகனம் மீது மரம் விழுந்து நல்வாய்ப்பாக பயணிகள் சிறு காயத்துடன் தப்பினர்.

சுற்றுலா முக்கியம் வாய்ந்த ரோடுகளில் ஏராளமான மரங்கள் காய்ந்த நிலையில் விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் நாள்தோறும் இவ்வாறான ஆபத்து மரங்களை கடந்து செல்கின்றனர்.

இருந்தபோதும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை.

மாவட்ட நிர்வாகம் மலைப் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை முன்னெச்சரிக்கையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us