/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிதிலமடைந்து வரும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கலாமே: பராமரிக்காது தொல்லியல் துறை அலட்சியம்
/
சிதிலமடைந்து வரும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கலாமே: பராமரிக்காது தொல்லியல் துறை அலட்சியம்
சிதிலமடைந்து வரும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கலாமே: பராமரிக்காது தொல்லியல் துறை அலட்சியம்
சிதிலமடைந்து வரும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கலாமே: பராமரிக்காது தொல்லியல் துறை அலட்சியம்
ADDED : அக் 24, 2024 07:13 AM

மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலுார், பாச்சலுார், பேத்துப்பாறை, அடுக்கம், மன்னவனுார்,கே. சி. பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, சிறுமலை, கன்னிவாடி,வடமதுரை,குஜிலியம்பாறை, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அடையாளப்படுத்தி உள்ளனர்.
இவை கண்டறியப்பட்ட கையோடு மத்திய அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பு பதாகை மட்டுமே ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து அவற்றின் பழமையை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொல்லியல் சின்னங்கள் சிதிலமடைந்து வருகிறது. ஆதி மனிதர்கள் வாழ்ந்த எச்சங்கள், பாறை ஓவியங்கள், முதுமக்கள் தாழி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், கற்திட்டுகள், வணிகம் சார்ந்த கல்வெட்டுகள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் உள்ளன.
இவற்றை தொல்லியல் துறையினர் பராமரிக்காது சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பாதுகாத்து சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் தொல்லியல் சின்னங்கள்அடங்கிய சுற்றுலாவை அறிமுகப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண் சுற்றுலா என்ற வரிசையில் இவற்றையும் இணைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

