sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கூட்டுறவு சொசைட்டிகளில் யூரியா விநியோகம் தாமதம்

/

கூட்டுறவு சொசைட்டிகளில் யூரியா விநியோகம் தாமதம்

கூட்டுறவு சொசைட்டிகளில் யூரியா விநியோகம் தாமதம்

கூட்டுறவு சொசைட்டிகளில் யூரியா விநியோகம் தாமதம்


ADDED : அக் 22, 2025 12:34 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகள் பாதிப்பு

குஜிலியம்பாறை அக்.22- --: குஜிலியம்பாறை சுற்றுப்பகுதிகளில் மானாவாரி விவசாயமாக எள்ளு, நிலக்கடலை, துவரை, சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது சோளப் பயிர்கள் 2 அடி உயரம் வரை வளர்ந்துள்ள நிலையில் யூரியா போட்டால்தான் போதுமான தீவனப் பயிராக வளர்ச்சி பெறும்.

இல்லா விட்டால் இரண்டடி உயரத்திலே தனது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ளும். கூட்டுறவு சொசைட்டிகளில் யூரியா விநியோகம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராஜரத்தினம் கூறுகையில், ''கருங்கல் சுற்றுப்பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் சோள பயிர்கள் பயரிட்டுள்ளனர். இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது யூரியா போட வேண்டும். யூரியா விநியோகம் கூட்டுறவு சொசைட்டிகளில் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர்.

விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு சொசைட்டிகளில் போதிய யூரியா மூடைகளை கையிருப்பில் வைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us