/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிப்பறை இருந்தும் 'நோயூஸ்' ஒட்டன்சத்திரம் 2 வது வார்டில் தொடரும் அவதி
/
கழிப்பறை இருந்தும் 'நோயூஸ்' ஒட்டன்சத்திரம் 2 வது வார்டில் தொடரும் அவதி
கழிப்பறை இருந்தும் 'நோயூஸ்' ஒட்டன்சத்திரம் 2 வது வார்டில் தொடரும் அவதி
கழிப்பறை இருந்தும் 'நோயூஸ்' ஒட்டன்சத்திரம் 2 வது வார்டில் தொடரும் அவதி
ADDED : டிச 08, 2024 05:12 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு நாகணம்பட்டியில் பொதுக்கழிப்பறை இருந்தும் பயன்படுத்தாத நிலையில் அதே வார்டில் உள்ள இருளகுடும்பன்பட்டியில் கழிப்பறை வசதி இன்றி திறந்தவெளியை நாடும் நிலை தொடர்கிறது.
செல்லப்பகவுண்டன்புதுார், நாகணம்பட்டி, பெரியாஞ்செட்டிபட்டி, இருளகுடும்பன் பட்டி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குடிநீர் பிரச்னை இல்லை.
நகராட்சியின் குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் குப்பை அள்ளப்படுகிறது. குப்பை அள்ளப்படும் வரை நாகணம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே குவிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு தொடர்கிறது.
பெரியாஞ்செட்டிபட்டி, இருளகுடும்பன்பட்டி பகுதிகளில் பொது கழிப்பறை வசதி இல்லை. விளைநிலங்கள் விலை நிலங்களாக மாறிவிட்டதால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதிலும் பெண்களுக்கு சிரமம் உள்ளது.
இருளக்குடும்பன்பட்டியில் இருந்து நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டிற்கு வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் பல இடங்களில் புற்கள் முளைத்து மழை நீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது .
நாகணம்பட்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் நாகணம் பட்டியிலிருந்து புதிய பைபாஸ் ரோடு செல்லும் ரோடு திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது.
கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. அடிக்கடி கொசு மருந்து அடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு பகுதியிலிருந்து சீமை கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப் பட்டுள்ளன.
புதிய பைபாஸ் ரோட்டில் பாலத்தை அகலப்படுத்தி அதன் கீழ் செல்லும் வடிகால் வாய்க்காலை பெரிதாக்க வேண்டும்.
சாலையில் கோழிக்கழிவுகள்
ஜெயக்குமார், பா.ஜ., நகரத் துணைத் தலைவர்:நாகணம்பட்டி பைபாஸ் ரோடு சரியாக போடாததால் சேதமாக உள்ளது.
பாரத பிரதமர் ஜல்ஜீவன் குடிநீர் இணைப்புக்கு தோண்டிய பள்ளங்கள் சரிவர மூடாமல் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். பெரியாஞ்சிபட்டி செல்லும் ரோடு குறுகலாக உள்ளது.
நான்கு வழிச்சாலையில் கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். போதுமான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி திறந்த வெளி கழிப்பிடம் இல்லா நிலையை உருவாக்க வேண்டும்.
தேவை புதிய கால்வாய்
விஜய ரமனேஸ்வரன், அ.தி.மு.க., நகர துணை செயலாளர்: நாகணம்பட்டியில் உள்ள சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் இன்னும் சரி வர பயன்படுத்தவில்லை. திறந்தவெளியை பயன்படுத்துவது தொடர்கிறது. இதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இருளக்குடும்பன்பட்டி கழிவு நீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்காமல் இருக்க புதிதாக கால்வாய் கட்டப்பட்டது போல் தெற்கு பகுதியிலும் புதிதாக கட்ட வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
அருள்மணி, கவுன்சிலர் (தி.மு.க.,): நாகணம்பட்டியில் உள்ள கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. முறையாக பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுக் கழிப்பறையை துாய்மையாக வைத்துக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
இருளக்குடும்பன்பட்டியில் சுகாதார வளாகம் கட்டப்படும். பைபாஸ் ரோட்டின் கீழ் தண்ணீர் செல்லும் பாதையை பெரிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்