ADDED : ஜன 03, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கட்சி பொதுகூட்டம் கோபால்பட்டியில் நடந்தது.
மாநில அமைப்புச் செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். அகில இந்திய குடும்ப மகா சபா சன்னிதானம் ராஜ தேவேந்திரர், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.கே.விஷ்ணு முருகேசன், நிர்வாகிகள் கனகராஜ், காரையூர் பழனிச்சாமி, முருகபாண்டியன், முனுராமசந்திரன், அழகர்சாமி கலந்து கொண்டனர். தி.மு.க., அரசு தேவேந்திரகுல வேளாளர்களை புறக்கணிப்பதை கண்டித்தும், எஸ்.சி., பட்டியலில் இருந்து வெளியேற்றும் கட்சியை லோக்சபா தேர்தலில் ஆதரிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.