sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநிக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை; கண்டுகொள்ளாத நகராட்சி, கோயில் நிர்வாகங்கள்

/

பழநிக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை; கண்டுகொள்ளாத நகராட்சி, கோயில் நிர்வாகங்கள்

பழநிக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை; கண்டுகொள்ளாத நகராட்சி, கோயில் நிர்வாகங்கள்

பழநிக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை; கண்டுகொள்ளாத நகராட்சி, கோயில் நிர்வாகங்கள்

7


ADDED : ஜூலை 07, 2025 02:22 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:22 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி முருகன் கோயிலுக்கு வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் பாதையாத்திரை பக்தர்கள் என நாள்தோறும் அதிக அளவில் ரயில், பஸ், தனியார் வாகனங்கள் மூலம் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் நகராட்சி, கோயில் நிர்வாகங்கள் சார்பில் முறையாக செய்து கொடுப்பதில்லை.

குறிப்பாக, பஸ் ஸ்டாண்டில் போதிய கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் நகராட்சி நிர்வாகம் செய்வதில்லை. திரு ஆவினன்குடி அருகே அருள்ஜோதி வீதி ஆகிய பகுதிகளில் பார்க்கிங் வசதிகள் இல்லை. கோயில் சார்பில் உள்ள சுற்றுலா வாகன நிறுத்தும் இடம் ஓரிரண்டே உள்ளது.

கோயில் பகுதிகளில் நுழைவுக்கட்டணம் கட்டுவதோடு, தனியார் வாகன பார்க்கிங்கிற்கும் பணம் செலுத்த வேண்டிய நிலையில் பக்தர்கள் உள்ளனர். மேலும், ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்திச்செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

அதே நேரத்தில் கைடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் போலி கைடுகளால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கோயில் வரை பக்தர்கள் அதிகளவில் ஏமாற்றப்படுகின்றனர்.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பழநி கோயில் நகரத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி, கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us