sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கரடு முரடான மலைப்பாதையால் பக்தர்கள் பரிதவிப்பு

/

கரடு முரடான மலைப்பாதையால் பக்தர்கள் பரிதவிப்பு

கரடு முரடான மலைப்பாதையால் பக்தர்கள் பரிதவிப்பு

கரடு முரடான மலைப்பாதையால் பக்தர்கள் பரிதவிப்பு


ADDED : பிப் 23, 2024 06:01 AM

Google News

ADDED : பிப் 23, 2024 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. இதனால் பஸ்களை ரேக்குகளில் நிறுத்த முடியாமல் நடுவில் நிறுத்துகின்றனர். பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் சிரமம் ஏற்படுகிறது . ராஜா, திண்டுக்கல்.

.............------சேதமடைந்த ரோடு

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டின் பல இடங்கள் சேதம் அடைந்து பெரிய பள்ளங்களாக மாறிவிட்டது. இந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் அதிகம் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது . - இதனை சீரமைக்க வேண்டும் .ராஜா, ஒட்டன்சத்திரம்.

.............-------மின்கம்பத்தில் படரும் செடிகள்

வடமதுரை திருக்கண் ரோட்டில் லக்கன்பட்டியில் இருக்கும் மின்கம்பத்தின் உச்சிவரை செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதில் ஏறும் தேவாங்கு உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இங்குள்ள கொடிகளை மின்வாரியத்தினர் அகற்ற வேண்டும். - கண்ணன், எரியோடு.

.................--------கரடு முரடான மலை பாதை

நத்தம் கரந்தமலைக்கு நத்தம் மாரியம்மன் கோயில் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க செல்கின்றனர். அந்த மலைப் பாதையில் கரடு முரடான பாறைகள் உள்ளது. அதனை அப்புறப்படுத்தி பக்தர்கள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ந.கோபி, வேம்பார்பட்டி.

................---------சாக்கடையில் அடைப்பு

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ராஜகாபட்டி ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது .இதனால் சுகாதாக்கேடு ஏற்படுகிறது . இதன் அருகே குப்பையை கொட்டி அகற்றப்படாமல் உள்ளது .உடனே அகற்ற வேண்டும். முருகன், ராஜகாபட்டி.

............---------மலைபோல் குப்பை

திண்டுக்கல் கொட்டப்பட்டி ரோட்டில் குப்பை மலைபோல் குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பல்வேறு பகுதியில் இருந்து குப்பையை கொட்டி அகற்றப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது .குப்பையை அகற்ற வேண்டும். மயில்சாமி, கொட்டப்பட்டி.

............---------

மண் குவியலால் இடையூறு

திண்டுக்கல் நந்தவனம் ரோட்டில் பாதாள சாக்கடையில் துார்வாரி மண் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு அகற்றாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சிதறியும் கிடக்கிறது .போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் முன் மண்ணை அகற்ற வேண்டும்.முருகன், திண்டுக்கல்.

................

...............---------






      Dinamalar
      Follow us