ADDED : ஜன 25, 2024 05:39 AM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: சத்திரப்பட்டி அடையாளவேல் கோயிலில் பழநி பாதயாத்திரை பக்தர்கள் பொரி வைத்து வழிபாடு நடத்தினர்.
பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்ட பக்தர்கள் பல கி.மீட்டர் துாரம் பாதயாத்திரையாக காவடிகளை சுமந்து கொண்டு பழநிக்கு செல்வது வழக்கம். ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்கு செல்லும் வழியில் சத்திரப்பட்டியில் உள்ள அடையாளவேல் திருக்கோயிலில் பொரி வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்று பொரியை படைத்து வழிபட்டு சென்றனர்.
