sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒரு மாதமாக குடிநீர் இல்லை

/

ஒரு மாதமாக குடிநீர் இல்லை

ஒரு மாதமாக குடிநீர் இல்லை

ஒரு மாதமாக குடிநீர் இல்லை


ADDED : செப் 23, 2011 10:52 PM

Google News

ADDED : செப் 23, 2011 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : சீலப்பாடி ஊராட்சி காந்திஜிநகரில், ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் நகராட்சி எல்லை அருகே காந்திஜிநகர் அமைந்திருந்தாலும், சீலப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நகராட்சி பகுதியை விரிவாக்கம் செய்வதற்காக ஆய்வு மேற்கொண்டபோது காந்திஜிநகர் பகுதியை திண்டுக்கல் நகராட்சியுடன் இணைக்கும் திட்டமும் இருந்தது. ஆனால் நகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்வது கிடப்பில் போடப்பட்டதால், தொடர்ந்து சீலப்பாடி ஊராட்சிக்குள் இருக்கிறது. காந்திஜிநகர் பகுதி மக்கள் பங்களிப்புடன், மத்திய அரசின் சுஜால்தார திட்டத்தில் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. இதில் நீர் ஏற்றுவதற்கு வழி இல்லை. திண்டுக்கல் நகருக்கு காவிரி குடிநீர் வழங்கும் மெகா தொட்டி, காந்திஜி நகருக்கு அருகே கரூர் ரோட்டில் உள்ளது. இங்கிருந்து தான் நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. காந்திஜி நகர், ஊராட்சி எல்லையில் இருப்பதால் காவிரி நீர் கிடைக்கவில்லை. இந்நிலையில், காந்திஜி நகருக்கு குடிநீர் வினியோகம் செய்து 34 நாட்கள் ஆகிவிட்டது. ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீர், குடிநீர் அல்லாத பிற உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. இப்பகுதி மக்கள், குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, குடிநீர் வினியோகம் செய்யவேண்டும்.






      Dinamalar
      Follow us