sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் நாளை கோலாகலமாக துவங்குகிறது தினமலர் வழிகாட்டி! உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிகழ்ச்சி

/

திண்டுக்கல்லில் நாளை கோலாகலமாக துவங்குகிறது தினமலர் வழிகாட்டி! உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் நாளை கோலாகலமாக துவங்குகிறது தினமலர் வழிகாட்டி! உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் நாளை கோலாகலமாக துவங்குகிறது தினமலர் வழிகாட்டி! உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிகழ்ச்சி


UPDATED : ஏப் 03, 2025 09:11 AM

ADDED : ஏப் 03, 2025 04:55 AM

Google News

UPDATED : ஏப் 03, 2025 09:11 AM ADDED : ஏப் 03, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பிளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் என்ன படிப்பை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'தினமலர்', கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (ஏப்., 4) திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே.மகாலில் கோலாகலமாக துவங்குகிறது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை, நாளை மறுநாள் (ஏப்.,5) திண்டுக்கல் பி. வி.கே. மகாலில் நடக்கிறது. கல்வி கண்காட்சிகள், கருத்தரங்குகளும் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது.

சிறப்பு கருத்தரங்குகளில் நீட் ஜெ.இ.இ., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ் தொடர்பாக கல்வி ஆலோசகர் அஸ்வின், அனைவருக்கும் ஐ.ஐ.டி., தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் தலைப்பில் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லிபாபு, சி.ஏ.,வின் எதிர்காலம் குறித்து ஆடிட்டர் அருண், எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, உயர்கல்வி தொடர்பாக ஐ.எப்.எஸ்., அதிகாரி சுதா உட்பட நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடி ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

அனைத்து விபரங்களும் ஒரே இடத்தில்...


இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கல்லுாரிகளுக்கான விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரையிலான அனைத்து நடைமுறைகளும், கல்விக் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் ஒரே இடத்தில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லுாரிகளைத் தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.

வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள QR Code ஸ்கேன் செய்து அல்லது 95667 77833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு RGN என்று டைப் செய்து அனுப்பவும். அனுமதி இலவசம்.

இந்நிகழ்ச்சிக்கு 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது. மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜி., அன்ட் டெக்னாலஜி, கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.






      Dinamalar
      Follow us