/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாஜி ராணுவத்தினருக்கு சுய தொழில் கருத்தரங்கு : உலகளாவிய சந்தை எம்.எல்.ஏ., கோரிக்கை
/
மாஜி ராணுவத்தினருக்கு சுய தொழில் கருத்தரங்கு : உலகளாவிய சந்தை எம்.எல்.ஏ., கோரிக்கை
மாஜி ராணுவத்தினருக்கு சுய தொழில் கருத்தரங்கு : உலகளாவிய சந்தை எம்.எல்.ஏ., கோரிக்கை
மாஜி ராணுவத்தினருக்கு சுய தொழில் கருத்தரங்கு : உலகளாவிய சந்தை எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஆக 08, 2011 04:05 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பழங்கள், காய்கறிகள், மலர்கள் ஏற்றுமதி செய்வதற்கு உலகளாவிய சந்தையை ஏற்படுத்த வேண்டும்,'' என பாலபாரதி எம்.எல்.ஏ., கூறினார்.
திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடலில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம் அதிகமாக விளைகிறது.
இதற்கு விலை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் கரும்பு, நெல்லுக்கு அரசு கொள்முதல் விலையை நிர்ணயித்தது மாதிரி, மக்காச்சோளத்திற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தக்காளி, வெங்காயத்தை பாதுகாப்பதற்கு குளிர்பதன கிட்டங்கி வசதி இல்லாமல் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை தலைமையகமாக கொண்டு பழங்கள், காய்கறிகள், மலர்கள் வாங்க,விற்கவும், ஏற்றுமதி செய்யவும் உலகளாவிய ஒரு சந்தையை ஏற்படுத்த வேண்டும்.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும், என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மக்காச்சோள விவசாயிகள் அதிகம் லாபம் பெற, அவர்களாகவே நேரடியாக சென்று விற்பனை செய்வதற்கும, சந்தையை தேர்வு செய்வதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும், என்றார்.

