ADDED : செப் 01, 2011 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : தே.மு.தி.க., சார்பில் ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கட்சியின் 17 வார்டு சார்பில் நடந்த விழாவிற்கு காமாட்சி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் சங்கர், விஜயகுமார், விக்னேஷ் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் கணபதி வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி வழங்கினார். வர்த்தகர் அணி செயலாளர் பெருமாள், மகளிரணி செயலாளர் சுமதி, இளைஞரணி துணை செயலாளர் பாலாஜி, மாணவரணி செயலாளர் கவிதாமுருகன், சதீஷ்குமார், அவுலியப்பா, ஒன்றிய பொறுப்பாளர் கருப்புச்சாமி, அவை தலைவர் வேலுச்சாமி, பொரு ளாளர் முனியப்பன், நகர் பொருளாளர் மணிகண்டன் பங்கேற்றனர். நகர் அவை தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.