sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

/

பேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

பேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

பேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி


ADDED : அக் 08, 2011 10:50 PM

Google News

ADDED : அக் 08, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : ''வத்தலக்குண்டு பேரூராட்சியில் வெளிப்படையான நிர்வாகம் நடத்தப்படும்,'' என, தலைவர் பதவி அ.தி.மு.க., வேட்பாளர் சுசித்ரா பாண்டியன் கூறினார்.

அவர் கூறியது: அருணாச்சலபுரம், பெரியகுளம் ரோடு டோபி காலனியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்படும். இரவில் மக்கள் அச்சமின்றி நடமாட சோலார் தெரு விளக்குகள் அமைக்கப்படும். ரோடு, கால்வாய், கட்டட பணிகள் அனைத்தும் தரமானதாக நிறைவேற்றப்படும். முழுச் சுகாதாரம் உறுதியாக கிடைக்க, நாள்தோறும் துப்புரவு பணிகள் கண்காணிக்கப்படும். பை பாஸ் ரோடு பணியை விரைந்து முடிக்க அமைச்சர் விஸ்வநாதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் உத்தரவுப்படி பேரூராட்சி நிர்வாகம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். முதல்வரால் அறிவிக்கப்படும் திட்டங்களை உடனுக்குடன் பெற்றுத்தர முயற்சி செய்வேன். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகள் களையப்படும். அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைளை உடனுக்குடன் பரிசீலித்து, தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.



ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரது கோரிக்கைகளையும் நிறைவேற்ற உழைப்பேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் உபயோகத்தை படிப்படியாக குறைத்தல், மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தல் போன்ற பணிகள் நிறைவேற்றப்படும். இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வாகனம், குளிர்சாதன பெட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். மகளிர் சுகாதார வளாகம் இல்லாத வார்டுகளில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாள்தோறும் குடிநீர் கிடைக்கும் வகையில் 3 வார்டுகளுக்கு ஒரு லட்சம் லிட்டர் கொள்அளவில் தொட்டி அமைக்கப்படும். மாதந்தோறும் ஒரு வார்டு என்ற அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், என்றார்.










      Dinamalar
      Follow us