/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருமணத்தை மறைத்து மறுமணம் திண்டுக்கல் டிரைவர் தற்கொலை
/
திருமணத்தை மறைத்து மறுமணம் திண்டுக்கல் டிரைவர் தற்கொலை
திருமணத்தை மறைத்து மறுமணம் திண்டுக்கல் டிரைவர் தற்கொலை
திருமணத்தை மறைத்து மறுமணம் திண்டுக்கல் டிரைவர் தற்கொலை
ADDED : ஜூன் 27, 2025 03:10 AM

எரியோடு:முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2வது திருமணம் செய்த கல்லுாரி பஸ் டிரைவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பாலப்பட்டி குருவனுாரை சேர்ந்தவர் ராஜ்குமார், 30; தனியார் கல்லுாரி பஸ் டிரைவர். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.
தனக்கு திருமணமாகவில்லை எனக்கூறி அரவக்குறிச்சி இளம்பெண்ணை இரண்டாவதாக காதல் திருமணம் செய்தார்.
இதற்கிடையே, பெண் மாயமாகிவிட்டதாக அவரின் உறவினர்கள் அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்ததால், போலீசார் அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்த ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பெண்ணும் கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
ராஜ்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அதற்கு பயந்த அவர் திண்டுக்கல் - கரூர் தடத்தில் கோவிலுார் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.