sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி

/

ஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி

ஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி

ஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 08, 2011 10:21 PM

Google News

ADDED : செப் 08, 2011 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அன்னை சத்யா நகரில் ஆக்கிரமிப்பு, அசுத்தங்களை அகற்ற வேண்டும்.

திண்டுக்கல்- மதுரை சாலையில் இருந்து சின்னாளபட்டிக்குள் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களை ஆக்கிரமித்து ஏராளமானவர்கள் குடிசை அமைத்திருந்தனர். கடந்த ஆட்சியில் இந்த குடிசைகளை முறைப்படுத்தாமல், அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முழுவதும் மெயின்ரோட்டில் விடப்படுகிறது. இதனால் இப்பகுதி ரோடு ஓரங்களில் கழிவுநீர் சேறும், சகதியுமாக தேங்கி கிடக்கிறது. ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளதால் ரோட்டின் அளவு குறுகலாகியுள்ளது. கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்வோர் ரோட்டை விட்டு கீழிறங்க முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கியுள்ளது.கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்க வேண்டியுள்ளது. பிரதான ரோட்டில் மக்களை அல்லாட வைக்கும் ஆக்கிரமிப்பு, அசுத்தங்களை அகற்ற பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.










      Dinamalar
      Follow us