/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கைத்தறியில் "நம்பிக்கை மனிதர்கள்' கடைக்கண் பார்வை கிட்டுமா
/
கைத்தறியில் "நம்பிக்கை மனிதர்கள்' கடைக்கண் பார்வை கிட்டுமா
கைத்தறியில் "நம்பிக்கை மனிதர்கள்' கடைக்கண் பார்வை கிட்டுமா
கைத்தறியில் "நம்பிக்கை மனிதர்கள்' கடைக்கண் பார்வை கிட்டுமா
ADDED : அக் 04, 2011 11:37 PM
திண்டுக்கல்:உடல் திடகாத்திரமாக உள்ள சிலர் பிழைப்புக்காக கையேந்தும்
நிலையில், பார்வையற்ற நம்பிக்கை மனிதர்கள், கைத்தறி துண்டு நெய்து பசி
போக்கி கொள்கின்றனர்.
திண்டுக்கல் தோமையார்புரத்தில், சூசையப்பர்
பார்வையற்றவர் மறுவாழ்வு நலச்சங்கம் உள்ளது. இங்கு 110 பேர் பதிவு
செய்துள்ளனர். சங்கத்தின் மூலம் ராட்டை, பாவு, மூலப் பொருட்களை வாங்கி
துண்டு நெய்கின்றனர். கைத்தறி துண்டுகளை இவர்களே வீடுவீடாக விற்பனை
செய்கின்றனர். துண்டின் விலை 23 ரூபாய். செலவு போக 3 ரூபாய், இவர்களுக்கு
கிடைக்கிறது. இதன் மூலம் பசி போக்கி கொள்கின்றனர். நலச்சங்க நிர்வாகி
மச்சக்காளை கூறிய: சங்கம் 1989 ல் துவக்கப்பட்டது. தற்போது விசைத் தறி
உற்பத்தி அதிகமாக இருப்பதால், கைத்தறி துண்டுகளை, மக்கள் விரும்புவதில்லை.
பார்வையற்றவர்கள் விற்பதால், இரக்கப்பட்டு சிலர் வாங்குகின்றனர்.
இவர்களால், துண்டு மட்டுமே நெய்ய முடியும். அரசே கொள்முதல் செய்தால்,
பார்வையாற்றவர் வாழ்வில் ஒளி கிடைக்கும், என்றார்.

