/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வந்தே பாரத் ரயில் கதவு திறக்காததால் திண்டுக்கல் பயணிகள் தவிப்பு
/
வந்தே பாரத் ரயில் கதவு திறக்காததால் திண்டுக்கல் பயணிகள் தவிப்பு
வந்தே பாரத் ரயில் கதவு திறக்காததால் திண்டுக்கல் பயணிகள் தவிப்பு
வந்தே பாரத் ரயில் கதவு திறக்காததால் திண்டுக்கல் பயணிகள் தவிப்பு
ADDED : டிச 08, 2024 02:49 AM
திண்டுக்கல்:சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வந்தபோது இரண்டு பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் 15க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நாள் தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று ரயில் திண்டுக்கல் வந்தபோது சி4, சி5 பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பெட்டியில் வந்த திண்டுக்கல் சேர்ந்தவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் இறங்க முடியவில்லை. இருப்பினும் ரயில் புறப்பட்டது.
இதையடுத்து பயணிகள் அபாயசங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதற்குள் ரயில் ரயில் நிலையத்திலிருந்து நீண்ட தூரம் சென்று விட்டது. இதையடுத்து பெட்டிக்கு வந்த ரயில்வே அதிகாரி அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறினார். வேறு வழியின்றி பயணிகளும் சம்மதித்தனர்.
இதையடுத்து கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ரயில் கிளம்பி சென்றது.
கொடைரோடு ரயில் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணிகளை துாத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற ரயிலில் ஏற்றி திண்டுக்கல் அனுப்பி வைத்தனர்.