sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சென்னை ஐ.டி.,பெண் ஊழியரை ஏமாற்றிய திண்டுக்கல் வாலிபர்; எஸ்.பி.,யிடம் புகார்

/

சென்னை ஐ.டி.,பெண் ஊழியரை ஏமாற்றிய திண்டுக்கல் வாலிபர்; எஸ்.பி.,யிடம் புகார்

சென்னை ஐ.டி.,பெண் ஊழியரை ஏமாற்றிய திண்டுக்கல் வாலிபர்; எஸ்.பி.,யிடம் புகார்

சென்னை ஐ.டி.,பெண் ஊழியரை ஏமாற்றிய திண்டுக்கல் வாலிபர்; எஸ்.பி.,யிடம் புகார்


ADDED : டிச 28, 2024 06:18 AM

Google News

ADDED : டிச 28, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து,பணமும் பறித்து ஏமாற்றிய திண்டுக்கல் வாலிபர் மீது சென்னை ஐ.டி.,ஊழியர் எஸ்.பி.,அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த ஐ.டி.,ஊழியர் சிவதுர்கா கொடுத்த மனுவில்,2022ல் சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில் பயணித்த போது திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த வாலிபர் நண்பராக பழகினார். அதன்பின் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்தோம். என்னை திருமணம் செய்வதாக கூறினார். கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன். இதுவரை ரூ.9 லட்சம் கொடுத்துள்ளேன். அவர் அழைக்கும் போதெல்லாம் மதுரை,திண்டுக்கல் தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்கினேன். அப்போது எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். திருமணம் குறித்து பேசும்போதெல்லாம் அவர் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார். அவரது பேச்சில் வித்தியாசம் தெரிந்ததால் அவரது பெற்றோரிடம் பேச வேண்டும் என கூறினேன். அதிலிருந்து என் அலைபேசி அழைப்புகளை புறக்கணித்தார். அவரது பெற்றோரை தொடர்பு கொண்டபோது அவர்களும் என்னை மிரட்டினர். அவரை பற்றி விசாரித்தபோது என்னை போல் பல பெண்களை ஏமாற்றியது தெரிந்தது. போலீசில் புகாரளித்தேன். அதை வாபஸ் பெறச்சொல்லி பல மிரட்டல்கள் வருகிறது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us