/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் ரோடு மறியல்
/
மாற்றுத்திறனாளிகள் ரோடு மறியல்
ADDED : பிப் 12, 2026 06:09 AM

திண்டுக்கல்: தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போல் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 2வது நாளாக திண்டுக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் ஸ்டாலின், ராமுத்தாய், கருப்புச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பகத்சிங் பேசினார். தொடர்ந்து அவர்கள், பஸ் ஸ்டாண்ட் முன் அமர்ந்து ரோடு மறியல் செய்தனர்.
அனுமதி இன்றி ரோடு மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 387 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்து பின் மாலையில் விடுவித்தனர்.

