ADDED : நவ 22, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழநியில் மாற்றுத்திறனாளிக்கு அரசு வழங்கிய இடத்தை அதிகாரத்தை பயன்படுத்தி தனி நபர் அபகரித்து விட்டதாகவும், அவருக்கு அதிகாரிகள் துணை போவதாகவும் கூறி அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள்,சமூக ஆர்வலர்கள் குழுவினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபிநாத், வெங்கடேஷ் தலைமை வகித்தனர். பேட்டரி ஆட்டோ சங்க தலைவர் ராஜா முன்னிலை வகித்தார்.
நிர்வாகி முத்துகுமார், முருகன் பங்கேற்றனர்.