sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தெருக்களில் ஓடும் சாக்கடை நீரால் நோய் தொற்று

/

தெருக்களில் ஓடும் சாக்கடை நீரால் நோய் தொற்று

தெருக்களில் ஓடும் சாக்கடை நீரால் நோய் தொற்று

தெருக்களில் ஓடும் சாக்கடை நீரால் நோய் தொற்று


ADDED : பிப் 03, 2025 05:53 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டட கூரை சேதம் : பழநி அருகே மானுார் குழந்தைகள் மைய கட்டட கூரை சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் குழந்தைகள் பாதிக்கின்றனர்.வெயில் உள்ளே வருவதால் குழந்தைகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

--தங்கராஜ், மானுார்.

சேதமான கம்பங்கள் : திண்டுக்கல் முருகபவனம் வேளாங்கண்ணி மில் தெற்கு பகுதி டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் சேதமடைந்து காங்கிரீட் கம்பி வெளியே தெரிகிறது. விபத்து அபாயம் உள்ளதால்பலரும் அருகில் செல்ல அச்சப்படுகின்றனர் .இதைமாற்றி அமைக்க வேண்டும்.

-சு.மதுரைவீரன், திண்டுக்கல்.

குடிநீர் குழாயில் உடைப்பு : நிலக்கோட்டை - செம்பட்டி ரோடு சின்னாளபட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பல மாதங்களாக வீணாகிறது.ரோட்டில் தேங்கி உள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது .குழாய் உடைப்பு பகுதியை சரி செய்ய வேண்டும்.

-ரமேஷ், நிலக்கோட்டை.

உபயோகமற்ற சாய்வு தளம் : எரியோடு புங்கம்பாடி பிரிவு பயணியர் நிழற்கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளத்தை பயன்படுத்த முடியாதபடி உள்ளது.இதனை சீரமைப்பு செய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---

-ராமன், எரியோடு.

மின்கம்பத்தை சூழந்த செடிகள் : அம்பாத்துரை ரயில்வே கேட் அருகே சாமியார்பட்டியில் மின்கம்பம் முழுவதும் செடிகள் மறைத்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் இருளில் மக்கள் பாதிக்கின்றனர். மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

-முருகன், அம்பாத்துரை.

நடைபாதையில் குப்பை : திண்டுக்கல் அனுமந்த நகர் ரயில்வே மேம்பாலத்தில் இருபுற நடைபாதையில் குப்பையை வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், அனுமந்த நகர்.

தெருவில் ஓடும் சாக்கடை : சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சி கோட்டைக்காரன்பட்டியில் சாக்கடை தண்ணீர் தெருவில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள் , சிறுவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

-சரவணகுமார், ஒத்தக்கடை.






      Dinamalar
      Follow us