sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் நோய் தொற்று

/

ரோட்டில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் நோய் தொற்று

ரோட்டில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் நோய் தொற்று

ரோட்டில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் நோய் தொற்று


ADDED : டிச 18, 2024 05:34 AM

Google News

ADDED : டிச 18, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்நடைகளால் விபரீதம்

திண்டுக்கல் ஜி.டி.என். ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது . வாகனங்களில் செல்வோரும் விபத்தில் சிக்க சிரமப்படுகின்றனர்.இதை தவிர்க்க ரோடுகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் .பழனிச்சாமி, திண்டுக்கல்.

.................--------ரோட்டில் ஓடும் கழிவு நீர்

பழைய வத்தலக்குண்டில் கழுவு நீர் ரோட்டில் ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது .தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது .இதோடு கழிவு நீர் தேங்கி நிற்பதால் ரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது .அழகுமணி, பழைய வத்தலக்குண்டு...............--------

சீரமைக்காத ரோடு

நிலக்கோட்டை அருகே அனைப்பட்டியில் இருந்து விளாம்பட்டி வழி செல்லும் ரோடு சில மாதங்களுக்கும் முன் தண்ணீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்காமல் உள்ளது. சி.அய்யர்பாண்டி, நிலக்கோட்டை.

.............---------சேதமான அங்கன்வாடி

வடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்துள்ளது .இதனால் இங்கு கல்வி பயிலும் குழந்தைகள் பாதிக்கும் நிலை தொடர்கிறது .இதை கருதி புதிய கட்டடம் கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். --மணிவேல், வடமதுரை.

..........---------ரோட்டில் கோழிக் கழிவுகள்

திண்டுக்கல் அருகே மாலபட்டி ரோட்டில் கோழிக் கழிவுகளை கொட்டுவதால் துர் நாற்றம் வீசுகிறது. குப்பையுடன் கோழிக்கழிவு கலந்துள்ளதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. கழிவுகளை கொட்டுவார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயா, திண்டுக்கல்.

..........----------

சேதமடைந்த தொட்டி

திண்டுக்கல் அருகே பாறைப்பட்டியில் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. கட்டட கம்பிகள் வெளியே தெரிவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர் .தொட்டியை சீரமைக்க வேண்டும் .இல்லையெனில் அகற்ற வேண்டும். சிவா, பாறைப்பட்டி.

...............----------புதர் மண்டி உள்ள சாக்கடை

திண்டுக்கல் செல்வி நகர் சாக்கடையில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளதால் கழிவு நீர் தேங்கி ரோட்டில் செல்கிறது .இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர் . முறையாக அகற்ற வேண்டும். வாணி, திண்டுக்கல்.

.............-----------






      Dinamalar
      Follow us