ADDED : மார் 10, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி பயணியர் விடுதி அருகே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார்.
பழநியைச் சேர்ந்தவர் கணேசன் 56. நண்பர் குரும்பபட்டியைச் சேர்ந்த பால்பாண்டியன் 52, இருவரும் திண்டுக்கல் ரோடு பயணியர் விடுதி அருகே மது அருந்தினர்.
போதையில் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பால்பாண்டியன் அருகில் இருந்த கல்லை கணேசன் தலையில் போட்டுள்ளார். இதில் அவர் இறந்தார். பழநி டவுன் போலீசார் பால்பாண்டியனை கைது செய்தனர்.

