ADDED : டிச 07, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர தி.மு.க., 2ம் பகுதி மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கிவைத்தார்.
ஒற்றையர் பிரிவில் ஆண், பெண், இரட்டையர் பிரிவில் ஆண், பெண் என தனித்தனியே போட்டி நடத்தப்பட்டது. 50 அணிகள் கலந்துகொண்டதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊர வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பரிசுகள் வழங்கினார். மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, மாநகர பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் புஷ்பலதா கலந்துகொண்டனர்.

