ADDED : பிப் 14, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : வடமதுரையில் நகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலை வகித்தார். செயலாளர் கணேசன் வரவேற்றார். துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை, தேன்மொழி, பொருளாளர் முரளிராஜன் பங்கேற்றனர். லோக்சபா தேர்தல் பணியில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தற்போதிருந்தே பணிகளை மும்முரமாக செய்து தி.மு.க., கூட்டணிக்கு அதிக ஓட்டுகள் பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

