/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'வடை' வழங்கி தி.மு.க., பிரசாரம்
/
'வடை' வழங்கி தி.மு.க., பிரசாரம்
ADDED : மார் 07, 2024 06:23 AM

சின்னாளபட்டி: மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து 'உளுந்த வடை' வழங்கி சின்னாளபட்டியில் தி.மு.க.,வினர் நுாதன பிரசாரம் செய்தனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பேரூராட்சிகளில் வார்டு வாரியாகவும், ஊராட்சிகளில் கிராம வாரியாகவும், 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க., அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சமீபத்தில் பிரசாரம் துவக்கினர்.
நேற்று முதல் சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் தி.மு.க.,வினர் 'மோடி சுட்ட வடை' என்ற தலைப்பில் துண்டு பிரசுரத்துடன் 'உளுந்த வடை' வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரூராட்சியின் நாலாவது வார்டில் வார்டு செயலாளர் ஆர். எஸ். முருகன் தலைமையில் அவைத்தலைவர் அருணகிரி, துணைச்செயலாளர் சண்முகம் பங்கேற்றனர்.

