ADDED : ஆக 24, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக்கூட்டம் மாவட்ட அவைத் தலைவர்கள் மோகன், காமாட்சி தலைமையில் நடந்தது. அமைச்சர் பெரியசாமி பேசினார்.
அமைச்சர் சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.காந்திராஜன், மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, தேர்தல் பார்வையாளர்கள் பரணி மணி, செல்வக்குமார், பாண்டியன், கள்ளிப்பட்டி மணி, ரஞ்சன் துரை, நிர்வாகிகள் நாகராஜன், பிலால், சத்தியமூர்த்தி, ராஜாமணி, விஜயன்,மாநகர பொருளாளர் மீடியா சரவணன், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன் கலந்துக்கொண்டனர்.

