ADDED : ஏப் 23, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை : செந்துறை அருகே சித்திரைகவுண்டன்பட்டியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பெண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது.
35-க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை அரியலுார் அணி, 2-ம் பரிசை கரூர் அணி, 3-ம் பரிசை பொள்ளாச்சி அணி, 4-ம் பரிசை - கோவில்பட்டி அணி வென்றன. இதற்கான பரிசளிப்பு விழா வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் பரிசு ,கோப்பை , கேடயங்களை வழங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா கலந்து கொண்டனர்.