/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒராண்டு கடந்தும் புதிய ரேஷன் கார்டு வழங்கல; எந்த ஒரு நல உதவி பெற முடியாது மக்கள் அவதி
/
ஒராண்டு கடந்தும் புதிய ரேஷன் கார்டு வழங்கல; எந்த ஒரு நல உதவி பெற முடியாது மக்கள் அவதி
ஒராண்டு கடந்தும் புதிய ரேஷன் கார்டு வழங்கல; எந்த ஒரு நல உதவி பெற முடியாது மக்கள் அவதி
ஒராண்டு கடந்தும் புதிய ரேஷன் கார்டு வழங்கல; எந்த ஒரு நல உதவி பெற முடியாது மக்கள் அவதி
ADDED : பிப் 13, 2024 06:33 AM

வேடசந்துார், : திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 40 ஆயிரம் பேருக்கு கார்டு வழங்காததால், எந்த ஒரு நல உதவிகளை பெற முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பெரும்பாலான குடும்பங்களில் ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற்றால் திருமணம் நடைபெற்ற ஒரு சில மாதங்களிலே குடும்ப கார்டுகளில் இருந்து பெயரை நீக்கி புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து விடுவார். குடும்ப அட்டை தனியாக இருக்க வேண்டும் என்பது ஓர் விருப்பம் என்றாலும், தற்போது தமிழக அரசு பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்களில் வழங்கும் நல உதவிகளை பெறவும் இது வசதியாக இருக்கும் என்பதால் புதிய கார்டு கேட்பது தொடர்கிறது.
புதிய குடும்ப அட்டை கேட்டு 2023 பிப்ரவரி பின்பு இதுவரை பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்னும் கார்டு வந்து சேரவில்லை. இதனால் குடும்ப அட்டை கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் நாள்தோறும் அலுவலகத்திற்கு வந்து கார்டு வந்து விட்டதா என்ற ரீதியில் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இதுவரை கார்டு வழங்காததால் எந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும், முக்கிய தேவைகளுக்கு ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொடுக்கவும் முடியாமல் அவதிக்கு ஆளாகின்றனர்.
..................
100 சதவீதம் உண்மை இல்லை
2023 மார்ச் பிறகு இது வரை புதிய கார்டுகள் வழங்கப்படவில்லை. தற்போது விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் லாக் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய கார்டு கேட்டு விண்ணப்பிக்கவும் முடியவில்லை. தமிழகத்தில் இலவச டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்டங்களை இலவசமாக வழங்கியதில் இருந்தே புதிய கார்டு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உளவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படுவதாக கூறுகிறார். இதில் 100 சதவீதம் உண்மை இல்லை. புதிய கார்டுகள் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கார்டு வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் .
த.ராமசாமி, சமூக ஆர்வலர், வேடசந்துார்.
...........