/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் ஓடையில் குவியும் குப்பையால் மாசடையும் குடிநீர்
/
தண்ணீர் ஓடையில் குவியும் குப்பையால் மாசடையும் குடிநீர்
தண்ணீர் ஓடையில் குவியும் குப்பையால் மாசடையும் குடிநீர்
தண்ணீர் ஓடையில் குவியும் குப்பையால் மாசடையும் குடிநீர்
ADDED : பிப் 08, 2026 06:21 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் நன்னீர் ஓடையில் கொட்டப்படும் குப்பையால் குடிநீர் மாசடைந்துள்ளது.
கொடைக்கானல் மனோரத்தினம் சோலை அணைப்பகுதியிலிருந்து உருவாகும் நன்னீர் ஓடையை மறித்து நகராட்சி செல்லப்புரம் பகுதியில் தடுப்பணையை கட்டமைத்துள்ளது. இதிலிருந்து பாம்பார்புரம் , நகர் பகுதிக்கு 2002 முதல் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
மனோரத்தினம் சோலை அணையில் இருந்து வரும் நீரோடையில் கட்டுமான குவியல் ,குப்பை குவிக்கப்படுவதால் மாசடைந்துள்ளது. மேலும் தடுப்பனையும் பராமரிப்பின்றி புதர் மண்டி உள்ளது.
நீர்வரத்து பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து சுருங்கி உள்ளது. குடிநீர் ஆதாரமான இந்த ஓடையில் உள்ள குப்பையை அகற்றி சுகாதாரமான தண்ணீர் சப்ளை செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

