/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொங்கல் விடுமுறையால் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்பு: பாராக மாறிய கொடைக்கானல் சாலை, விவசாய நிலங்கள்
/
பொங்கல் விடுமுறையால் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்பு: பாராக மாறிய கொடைக்கானல் சாலை, விவசாய நிலங்கள்
பொங்கல் விடுமுறையால் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்பு: பாராக மாறிய கொடைக்கானல் சாலை, விவசாய நிலங்கள்
பொங்கல் விடுமுறையால் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்பு: பாராக மாறிய கொடைக்கானல் சாலை, விவசாய நிலங்கள்
ADDED : ஜன 17, 2026 05:51 AM

மாவட்டத்தில், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி மாவட்ட, மாநில சுற்றுலா பயணிகள், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். இப்பகுதிகளில் பொங்கல் விடுமுறை தொடர்ச்சியாக உள்ள நிலையில் முக்கிய சாலைகளின் உள்ள கடைகளுக்கு முன்புற பகுதிகளில் இரவு நேரங்களில் மது குடித்து அசுத்தம் செய்து சென்று விடுகின்றனர்.
பகல் நேரங்களில் பழநி, கொடைக்கானல் சாலையில் இருபுறமும் சாலை ஓரங்களில் மது அருந்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
விவசாய நிலங்கள் அருகே மது குடித்துவிட்டு வயல்களில் உடைந்த பாட்டில்களை போட்டு செல்கின்றனர். இதனால் வயல் வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள் காயமடைகின்றனர் குளம்கரைகள், ஆற்றுப் பாலங்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை மினி பாராகவே குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மது குடிக்கும் நபர்கள் அரைகுறை ஆடையுடன் படுத்து கிடக்கின்றனர். பெண்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்படுகிறது.

