sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையை கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக்கேடு

/

குப்பையை கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக்கேடு

குப்பையை கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக்கேடு

குப்பையை கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக்கேடு


ADDED : ஜூலை 09, 2025 06:59 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமான குவி லென்ஸ்

திண்டுக்கல் சிறுமலை ரோட்டில் குவி லென்ஸ் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்கள் நடக்கிறது. குவி லென்சை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்னபூரணி, திண்டுக்கல்.

...............--------தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள்

எர்ரமநாயக்கன்பட்டி பெருமாள் மாதோப்பில் மின்ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. கையில் எட்டிப் பிடிக்கும் துாரத்திற்கு தாழ்வாக தொங்குவதால் மின் விபத்துக்கு வாய்ப்பு உள்ளது. இதை சீரமைக்க வேண்டும். பெருமாள், கோபால்பட்டி.

......---------நாய்களால் அச்சம்

திண்டுக்கல் சின்ன அய்யன்குளம் பகுதியில் சுற்றி திரியும் நாய்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அச்சுறுத்தலாக உள்ளதால் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர் . இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேசன், திண்டுக்கல்.

...............---------குப்பையை கொட்டி தீ

திண்டுக்கல் லாரி பேட்டையில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்படுகிறது. குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.சுரேஷ்குமார், திண்டுக்கல்.

............----------ஆபத்தை நோக்கி மரம்

மணியகாரன்பட்டி கோடாங்கி சின்னான்பட்டி ரோட்டோரம் மரம் காய்ந்த நிலையில் விபத்தை நோக்கி காத்திருக்கிறது . அவ்வழியே செல்வோர் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர். ஆபத்தை நோக்கி உள்ள மரத்தை அகற்ற வேண்டும்.- சுந்தரம், அய்யலுார்.

.............----------

சேதமான கழிப்பறை

ஒட்டன்சத்திரம் சிந்தலப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ஆண்கள் பொது கழிப்பறை பல மாதங்களாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது .இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ரங்கசாமி, சிந்தலப்பட்டி .

................----------

சாக்கடையில் ஆக்கிரமிப்பு

பழநி அருகே நெய்க்காரபட்டி அம்பேத்கார் தெரு பகுதியில் சாக்கடை மேல் கட்டடம் கட்டி உள்ளதால் சாக்கடையை துார்வார சிரமம் ஏற்படுகிறது . இதன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.முகமது ஜின்னா, மானுார் .

................






      Dinamalar
      Follow us