/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு மருத்துவமனைக்கு இ.சி.ஜி., மெஷின்
/
அரசு மருத்துவமனைக்கு இ.சி.ஜி., மெஷின்
ADDED : அக் 13, 2025 03:37 AM
கோபால்பட்டி : -கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காமதேனு சாரிட்டிஸ், ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து ரூ.32,000 மதிப்புள்ள இ.சி.ஜி., மெர்சினை மக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினர்.
காமதேனு சாரிடிஸ் நிர்வாக அலுவலர் சங்கர கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட், அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை ஆலோசகர் பேராசிரியர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர்கள் கொரசின்னம்பட்டி சதீஷ்குமார் மிஷினை மருத்துவரிடம் வழங்கினர்.
மருத்துவர் ரெங்கசாமி, சுகாதார ஆய்வாளர் முனியப்பன், செவிலியர்கள் பெற்றுக்கொண்டனர்.இவ்விழாவை ஏ.பி.ஜே., அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் மருதை கலாம், நிர்வாகிகள் ஜெயபால், சரவணன் சாந்தினி, திருப்பதி ஏற்பாடு செய்தனர்.